நேற்றைய தினம் தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி தமிழகத்தில் பார்த்தீனியம் செடிகள் ஒழிக்கப்பட இருப்பதை உள்ளபடியே நாம் வரவேற்க வேண்டும். ஆனால் கூடவே வேலிகாத்தான் மரங்களை ஒழிப்பதற்கு இயக்கம் கொண்டு வரவேண்டும்.
நேற்றைய தினம் தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி தமிழகத்தில் பார்த்தீனியம் செடிகள் ஒழிக்கப்பட இருப்பதை உள்ளபடியே நாம் வரவேற்க வேண்டும். ஆனால் கூடவே வேலிகாத்தான் மரங்களை ஒழிப்பதற்கு இயக்கம் கொண்டு வரவேண்டும்.
போலிச் சாமியார்களும் போலி காந்தியவாதிளும் என்றுதான் தலைப்பிட நினைத்தேன்.என்னை மன்னித்துவிடுங்கள் என்று தொடக்கத்திலேயே கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் காந்தியும் சாமியார்களும் போலிகள்தானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது, என்ன செய்வது மின்னுவதெல்லாம் பொன் என்பதுதான் நடுத்தர வர்க்கத்தின் மனநிலை.. நோகாமல் நோம்பு இருப்பதில்தான் இந்தியாவின் காந்திய அகிம்சையின் சிறப்பே அடங்கியுள்ளது அதனால்தான் அன்னா அசாரேவின் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.. ஆனால் போரட்டதின் சுருதி குறைய ஆரம்பித்துள்ளதால் போராட்டத்தினை எப்படியாவது முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என மிரட்ட மன்னிக்கவும் கெஞ்ச ஆரம்பித்துள்ளார்கள். எனவே இந்த போராட்டம் இன்னும் …
ராசீவ் கொலையில் குற்ற தண்டனைப் பெற்ற மூவர் உயிர் காக்க தன் உயிரை ஈகம் செய்த செங்கொடியின் வீரம், வேலுநாச்சியார் படையில் உலகின் முதல் தற்கொலைப்படை பெண் போராளியான குயிலியின் வீரத்திற்கு இணையானது. ஆனால் அந்த குயிலி ஓரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்பதற்காக தமிழ் பேசும் தமிழ் தேசியவாதிகளின் வரலாற்றுப் பார்வையிலிருந்து முற்றிலும் மறக்கப்பட்டாள். நன்றி கெட்ட இந்த தமிழ்ச்சாதியின் மன ஓட்டம் இது. சாதியின் கொடும் கரங்களிலிருந்து தம்மைக் காக்க போராடும் தலித் மற்றும் பழங்குடிகடுகொள் பலைகளை செய்யப்படுவதை எண்ணி இந்த …
பிளஸ் ஒன் படிக்கும் மாணவன் பழனிகுமார் சாதி வெறிபிடித்த கள்ளர்களால் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறை திட்டமிட்டு நடத்திய தாக்குதலினால் ஆறு பேர் படுகொலைச் செய்யப்பட்டனர். பச்சைப் படுகொலையை காவலர்கள் நடத்திய விதம் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. 3 பேரை அடித்தே கொன்று போட்டது காவல் துறை. 3 பேரை துப்பாகக்கியால் சுட்டுக்கொன்றது
நமது பாரத பிரதமர் அவர்களை தலைவராக கொண்டு செயல்படும் இந்திய திட்டக் குழு மற்றும் அதன் துணை தலைவர் மண்டேக் சிங் அலுவாலியா அவர்களும் அவர்களது குழுவும் சேர்ந்து தயாரித்துள்ள அறிக்கையின் படி நகர் புறத்தில் 35 ரூபாயும் கிராம புறத்தில் 25 ரூபாயும் வருமானம் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களாக கனகிடபட்டுள்ள மக்களின் தொகை சுமார் 4௦ கோடிக்கு மேல். இதற்கு கடுமையான் எதிர்ப்பு கிளம்பவே திட்டக் குழு பின் வாங்கி தனது அறிக்கையை திருத்தி அமைக்க முன்வந்துள்ளது. இப்படி அறிக்கை அளித்தின் …
நீதி அரசர் மார்கண்டேய கட்ஜ். அவர்களின் பெட்டியினை அனைவரும் காண வேண்டும் என விரும்புகிறேன், இந்திய அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலையினை தெளிவாக விமர்சனம் செய்துள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக அவர் பதவி ஏற்ற உடன் ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகளை அவர் சுட்டிகாட்டியுள்ளார். அச்சு ஊடகங்கள் அரை குறை அறிவுடன் 80 சதவிகிதம் மக்களை முட்டாளாக்கும் பணியினை செய்கின்றன,
தமிழ் திரைப்பட உலகம் உண்மைகளை திரிப்பதில் வல்லவர்களை கொண்டுள்ள துறை என்பதை யார் தான் மறுக்க முடியும். மேற்கண்ட படம் அந்த வகையில் சேர்க்க தக்க படம் . போதி தர்மன் ஜென் பௌத்த சிந்தனையின் மூலவர் என்பதை முருகதாஸ் மறைத்திருந்தால் கூட அது அவரது அறியாமை என்று மன்னித்து விடலாம், ஆனால் அவர் புத்த துறவி என்பதையே அவர் மறைத்திருப்பது மிகுந்த உள் நோக்கம் உள்ளவர் என்பதை காட்டுகிறது.
உளவுத்துறையின் சதிக்கு பலியாகும் தமிழர்களும் துணைபோகும் மலையாளிகளும் என்ன ஆனது தமிழ் பேசும் தமிழர்களுக்கும் மலையாளம் பேசும் மலையாளிக்கும், திடீரென இப்படி பித்து பிடித்து முல்லை பெரியாறு அணைக்கு ஏன் மோதிக் கொள்கிறார்கள்? எங்கிருந்து வந்தது இந்த திடீர் பாசம்? அதுவும் இனப் பாசம்.
மதிப்பிற்குரிய தம்மத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்பிற்குரிய சாந்த மூர்த்தி அவர்களின் மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை, புரட்சியாளர் அம்பேத்கரின் வழியில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு தம்ம பரப்புப் பணியில் உழைத்த வெகு சிலரில் சாந்த மூர்த்தி அவர்களும் ஒருவர் என்பது நாமறிந்த ஒன்றுதான், அப்படி உழைத்த சாந்த மூர்த்தி அவர்களின் மறைவுச் செய்திக் கேட்டு உங்களைப் போலவே நானும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். கெடுவாய்ப்பாக அவரது மறைவு நிகழ்ச்சியில் …
தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்தக் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முறை தொடர்பான மறு ஆய்வு குறித்து எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன் வைத்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய அளவில் விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் அன்பிற்குரியப் நமது பொதுச் செயலாளர் மா.செ.சிந்தனைச் செல்வன் அவர்கள் தகுந்த முயற்சியை மேற்கொண்டு அதன் தொடக்கமாக இக்கருத்தரங்கு அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையை முழுமையாக ஏற்று ‘தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை’ …