Home Politics வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்

வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்

Comments Off on வெட்கங்கெட்டவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும்

தர்மபுரி தீ வைப்பு

12.11.2012 அன்று தர்மபுரி நத்தம்,அண்ணாநகர்,கொண்டப்பட்டி கிராமங்களின் சேரிகளில் சாதி வெறிபிடித்த வன்னியர்கள் நடத்திய கொள்ளை மற்றும் தீ வைப்பு வெறிகளை எழுச்சித் தலைவர் திருமா அவர்களுடன் சென்ற போது பார்த்தவைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எத்தனை கோரம், எத்தனை வெறி, தலித்துகள் பொருளாதாரத்தில் உயர்ந்து விட்டார்கள் என்ற வயிற்றெ

ரிச்சல் எல்லாம் சேர்ந்து வன்னியர்கள் உசுப்பிவிட்டது என்று சொல்லப்படுகிறது.

இது மட்டும் உண்மை என்றாலும் பிரிட்டிச் காலத்தில் வன்னியர்கள் குற்றப் பரம்பரையினாராக இருந்து இது போன்ற கொள்ளை மற்றும் தீவைப்பல் ஈடுபட்டதால் அவர்கள் காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்ததை மறந்திருப்பார்கள் என்று நினைத்தது தவறு என்பதை டாக்டர்.ராமதாசும் அவரது ரவுடி அடியாளான காடு வெட்டி குருவும் நிருபித்து வருகிறார்கள். தருமபுரி சாதி வெறியர்களின் கொள்ளையில் இவர்களின் ஆசிர்வாதம் இல்லாமலா இருந்திருக்கும். தமது அரசியல் அடித்தளத்தை முற்றிலுமாக இழந்து அம்மணமாக நிற்கும் ராமதாசு மற்றும் பாமக தமது அடித்தளத்தை மீண்டும் உருவக்கிக் கொள்ள முயற்சி செய்வதின் ஓர் அங்கம்தான் இந்த தாக்குதல். வன்னிய பிஞ்சுகளையும் பெண்களையும் ரவுடிகளாய் வளர்த்துள்ள இளைஞர்களையும் தாக்குதலில் இறக்கி முன்னோட்டம் பார்த்துள்ளனர் என்பதுதான் உண்மை.

ஒவ்வோரு நாளும் மக்கள் தொலைக்காட்சியில் வன்னியர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்று சாமியார்ககளின் பாணியைப் பின்பற்றி ராமதாசு செய்யும் உபதேசத்தைப் பாருங்கள் தருமபுரி கலவரத்தில் ராமதாசின் கரம் இருப்பது புரியும். ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள், நிராயுதபாணியாக இருக்கும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தி உங்களை உயர்த்திக் கொள்ள நீங்கள் முயற்சி செய்வதை எப்படியும் நீங்கள் நியாயப் படுத்தலாம், ராமதாசுக்கு இது கைவந்தக் கலை.. செயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் என் அம்மாவிடம் சோரம் போனதாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவர்தான் இந்த ராமதாசு. இப்போது தனது சொந்த சாதியே அப்படி சோரம் போனதுதான் என்று சொன்னாலும் சொல்லுவார். வெட்கங்கெட்ட இவர்களின் சாதி புத்தியை செறுப்பால் அடித்தா திருத்த முடியும், தமிழமே இது இவர்களின் தொடக்க முன்னோட்டம்தான் .. விழிப்பாய் இருக்கா விட்டால் வெறிபிடித்தவர்கள் பிற இடங்களிலும் குதறுவார்கள்…’

Load More Related Articles
Load More By admin
Load More In Politics
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …