Home Article வெறிபிடித்த குச்சி கொளுத்தி வைத்தியர்.

வெறிபிடித்த குச்சி கொளுத்தி வைத்தியர்.

Comments Off on வெறிபிடித்த குச்சி கொளுத்தி வைத்தியர்.

27 நவம்பர், இன்று காலை கடலூ மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பாச்சாரப்பாளையம் சேரியில் நடந்த தீ வைப்பு மற்றம் கொள்ளையில் பாமகவின் வன்னிர்கள் திருட்டுக் கை நீண்டுள்ளது. அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வன்னியர் ஒருவரின் இல்லத் திறப்பு விழாவிற்கு தனது அடியாள் காடுவெட்டி குருவின் புடை சூழ வந்த மன நலம் பாதிக்கப்பட்ட மருத்துவர் ராமதாஸ் வழக்கம்போல, வன்னியப் பெண்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், ,இல்லையெனில் தலித் இளைஞர்கள் மயக்கிக் கொண்டு போய்விடுவார்கள். என்றெல்லாம் பேசிவிட்டுப் போனார். அங்கிருந்த இளைஞர்கள் வன்னிய இளைஞர்களை கேவலமாக பேசிவிட்டுப்போன ராமதாசை விளாசி எடுக்காமல் அந்த வெட்கங்கெட்டவர்கள் சேரிகளின் மீது பாய்ந்திருக்கிறார்கள்.

வெறிபிடித்த நாய் ஒன்றை நீங்கள் எங்காவது பார்க்க நேர்ந்தால் அது செய்யும் செயலை உற்றுப் பாருங்கள். அதை நீங்கள் கல்லெடுத்து அடித்தால் அது அடித்தவரை விட்டு விட்டு கல்லைத்தான் முதலில் கடிக்கும். வெறி பிடித்த நாயின் மன நிலை அப்படி. அதுபோலத்தான் டாக்டர்.ராமதாஸ் அப்பாவி வன்னியர்களை மாற்றி வருகிறார். வன்னிய பெண்களை தலித் இளைஞர்கள் மயக்கி விடுகிறார்கள் என்றால் வன்னியப் பெண்கள் அவ்வளவு பலவீனமாக இருக்கிறார்களா அல்லது வன்னியப் பெண்களை மயக்கும் அளவிற்கு வன்னிய இளைஞர்கள் துப்பு கெட்டுபோய் இருக்கிறார்களா?

யாரை இந்த டாக்டர்- கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார். இதே வேளையாக ராமதாசும் அவரது அடியாள் காடுவெட்டியும் அலைந்தார்கள் என்றால் பாமகவை சீக்கிரம் ஏறக்கட்ட வேண்டியததான்.

பாட்டாளிகளாய் இருக்கும் வன்னியர்களில் கோடீசுவரராக இருக்கும் ராமதாசின் குடும்பம் எப்படி அப்பாவி வன்னியர்களை கரை சேர்ப்பார்கள். சேர்த்த சொத்தை ஏழை வன்னியர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்களா?

100 ஏக்கர் நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு, செயற்கை உரம் போடாதா உணவை பயிரிட்டு செழிப்பாக உண்டு வாழம் ராமதாசுக்கு குடிக்க கூழு கூட இல்லாமல் அல்லாடும் வன்னியர்களைப் பற்றி யோசிக்க முடியுமா இப்போது.

நத்ததில் இறந்துப்போன வன்னியர் நாகராசனுக்கு பத்து ருபாய் கொடுக்க முடியாது ராமதாச அந்த குடும்பத்து பெண்ணான திவ்யாவிற்கு மட்டும் எப்படி நல்ல வாழ்வை அமைத்துத் தர முடியும்.

தலித்துகளை குற்றம் சாட்டுவதாக சொந்த சாதிப் பெண்களையே இழிவு படுத்தி வரும் வெறிபிடித்த டாக்டர் குடிசைகளை கொளுத்துவதை நிறுத்திவிட்டு மனிதராய் மாறுங்கள் டாக்டர்

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …