Home Article கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

Comments Off on கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

12249690_758713504272106_7181539166657206921_nஅண்மைகாலமாக இணையத் தளங்களில் அதிகமாக திப்பு சுல்தான் மோடியின் பாஜக பொய்யர்கலளால் கடுமையாக சாடப்பட்டு வருகிறார். இந்திய விடுதலைப் போரை திப்பு தொடங்கி வைக்கவில்லை, அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் அவர் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கிறார் என்று தொடர்ந்து இந்து பயங்கரவாதிகள் பொய்யை பரப்பி வருகிறார்கள். அதற்கு சான்றாக அவர்கள் வைக்கும் மிக முக்கியமான ஒரு பொய்.. லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு படத்தை எடுத்து அது திப்புவின் உண்மைபடம் என்றும், அதில் திப்பு பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல இருக்கிறான் பாருங்கள் என்று சொல்கிறார்கள்.

அவர்கள் காட்டும் படத்தை கீழே கொடுத்துள்ளேன். படத்தில் உள்ளவர் பார்ப்பதற்கு ரவுடி போலத்தான் இருக்கிறார், ஏனென்றால் அவர் கருப்பாக இருக்கிறார் ( கருப்பு வெள்ளை படத்தில் கலராக எப்படி இருப்பார் என்று நீங்கள் கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது) பக்கத்தில் கலராக இருக்கும் படம் பொய்யாக வரையப்பட்ட திப்புவின் ஓவியப் படம் என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை. இந்த பித்தலாட்டக்காரர்களுக்கு நான் முன்வைக்கும் கேள்விகள் இவை.. நெஞ்சில் துணிவிருந்தால் பதில் சொல்லட்டும்..

1. வெள்ளைக்காரன் மீயூசியத்தில் இருக்கும் இந்த கருப்பு வெள்ளைப் படம் உண்மையான படம் என்பதற்கு என்ன உத்திரவாதம்.

2. திப்பு பிறந்தது 20.11.1750 / பதவி ஏற்றது 29.12.1782. / இறந்தது 4.5.1799

3. உலகில் கேமரா கண்டுபிடிக்கப்பட்டு பாதி புகைப்படம் போல எடுக்கப்பட்டது நைஸ்போர் நிப்சே என்பவரால் 1816 ஆம் ஆண்டு .

4. கிடைத்திருக்கும் உலகின் முதல் புகைப்படம் 1826க்கும் 1827க்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

5. இந்தியாவில் கேமரா அறிமுகம் ஆன ஆண்டு 1840.. பிரிட்டிஷ் பயணிகளால் அது அறிமுகம் ஆனது. வில்லியம் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரால் நிறைய படங்கள் முதன் முதலில் எடுக்கப்பட்டது. அதுவும் அவர் கோயில்களைத்தான் எடுத்தார்.

6. 1799 ஆம் ஆண்டு நடந்த நான்காம் மைசூர் போரில் 50,000 பேர் கொண்ட வெள்ளை ராணுவ படையை எதிர்த்து வெறும் 30,000 ம் பேர்களுடன் தீரத்தோடு எதிர்த்து போரிட்ட திப்பு, போருக்காக திட்டமிட ஸ்ரீரங்க பட்டினம் கோட்டைக்கு அருகில் தங்கி இருக்கும் போது அவரது நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் பூரணய்யா என்ற பார்ப்பனரால் காட்டிக்கொடுக்கப்பட, ஒரு சாதாரண வெள்ளை சிப்பாய் அவரை துப்பாகியால் சுட்டு கொன்றான். துரோகத்தினால் திப்பு கொல்லப்பட்ட நாள் 4.5.1799

7. திப்பு இறந்து 61 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த கேமரா திப்புவின் ஆவியை படம் எடுத்ததா.

8. திப்பு ரவுடி, கொலைகாரன் என்றால் நமது மோடி மகாத்மாவா..குஜராத்தில் அவர் செய்தது சத்யாகிரகமா..?

12208547_758713510938772_7696397095368253012_n9.அப்படியானால் இந்திய சுதந்திரத்தை வாங்கித் தந்தது நமது மகாத்மா மோடியா..

10. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள் இந்து பயங்கரவாதிகளின் புளுகுக்கு அற்ப ஆயுள் கிடையாது என்பது உண்மைதான். ஆனால் இந்த பொழப்பு எதற்காக.

சன்னா

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …