March 29, 2023

Sanna Online

  • முகப்பு
  • புத்தகங்கள்
    • அறிமுகம்
    • மதிப்பாய்வுகள்
  • Interview
  • அரசியல்
    • உரைகள்
    • Public Meeting
    • கருத்தரங்க உரைகள்
    • சமூக அரசியல் நிகழ்வுகள்
    • சுற்றுச்சூழல்
  • காணொலி
  • DDF
  • History
    • Dalit History
  • நிகழ்வுகள்
  • புனைவிலக்கியம்
    • சிறுகதைகள்
    • கவிதைகள்
Home Tag Archives: கவுதம சன்னா

Tag Archives: கவுதம சன்னா

மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3

By admin
November 13, 2016
in :  Article, Politics, அரசியல் பொருளாதார ஆய்வுகள், சுற்றுச்சூழல்
Comments Off on மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு–3

கீழ்மட்டச் சந்தை திவால்… ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி …

Read More

சேரி சாதி தீண்டாமை – 9

By admin
October 23, 2016
in :  Dalit History, ஆய்வுகள், கட்டுரைகள்
Comments Off on சேரி சாதி தீண்டாமை – 9

சேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்.. – கௌதம சன்னா சேரிகள் உருவாக்கம் பற்றின் அம்பேத்கரிகளின் — கருத்துகள் அடிப்படையான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. என்றாலும் நம் காலத்தில் அவரது கருத்துகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்க்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சேரி என்கிற சொல்லாட்சி. தற்காலத்திய புரிதலுக்காக மட்டுமே அந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறார். 1. கிராமத்திற்கு வெளியே உள்ள குடியிறுப்பு ஷிமீஜீணீக்ஷீணீtமீ ஷிமீttறீமீனீமீஸீts 2. ஒதுக்கப்பட்ட தனிக் …

Read More

சேரி.. சாதி.. தீண்டாமை..8

By admin
August 21, 2016
in :  Article, Dalit History, Dr.Ambedkar, அம்பேத்கர், ஆய்வுகள், கட்டுரைகள்
Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை..8

சேரிகளின் தோற்றம் அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்…   கௌதம சன்னா 1 சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு  வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. …

Read More

கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

By admin
November 14, 2015
in :  Article, Politics, நம்மைச் சுற்றி
Comments Off on கொலைகாரன் திப்புவும்.. மகாத்மா மோடியும்..

அண்மைகாலமாக இணையத் தளங்களில் அதிகமாக திப்பு சுல்தான் மோடியின் பாஜக பொய்யர்கலளால் கடுமையாக சாடப்பட்டு வருகிறார். இந்திய விடுதலைப் போரை திப்பு தொடங்கி வைக்கவில்லை, அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் அவர் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கிறார் என்று தொடர்ந்து இந்து பயங்கரவாதிகள் பொய்யை பரப்பி வருகிறார்கள். அதற்கு சான்றாக அவர்கள் வைக்கும் மிக முக்கியமான ஒரு பொய்.. லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு படத்தை எடுத்து அது திப்புவின் உண்மைபடம் என்றும், அதில் திப்பு பார்ப்பதற்கு ஒரு ரவுடி போல இருக்கிறான் பாருங்கள் என்று …

Read More

சேரி.. சாதி.. தீண்டாமை… – 4

By admin
August 11, 2015
in :  Article, அம்பேத்கர், ஆய்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், படைப்புகள்
Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை… – 4

துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள் 1 இதுவரை உலகின் பல பாகங்களில் நிலவிக் கொண்டிருக்கும் உலகம் மற்றும் மனித படைப்புக் கதைகளைப் பார்த்தோம், இந்தியாவில் அவை எப்படி இருந்தன, இருந்துக் கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி இயல்பாகவே வாசகர்களுக்கு எழலாம், பல வாசகர்கள் அதை என்னிடம் கேட்டார்கள். சாதி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் முதல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்கிற ஆதங்கத்திலிருந்து எழுவதுதான் அந்த கேள்வி. ஆகவே சாதியின் புதிர்களை இந்தியத் தொண்மங்களிலிருந்து …

Read More

சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3

By admin
July 29, 2015
in :  Article
Comments Off on சேரி.. சாதி.. தீண்டாமை..யின் மூலவரலாறு – 3

மானிட பிறப்பைத் தேடிய நெடும் பயணங்கள்... 1 உலகம் எப்படி படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு விடை காண மனித சமூகம் 3000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விரிவாக பேசத் தொடங்கியிருந்தது. இந்த கேள்விதான் தத்துவ கேள்வியாக மாறி சமுகத்தை இரண்டுத் தரப்பாக பிரித்துவிட்டது. இதில் உலகத்தையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று நம்பியவர்கள் கருத்து முதல்வாதிகளாக ஆனார்கள். இவர்கள்தான் மனித பிறப்பு பற்றின தொண்மக் கதைகள் உருவாகக் காரணமானார்கள், அதைத்தான் கடந்த இதழில் பார்த்தோம். ஆனால், இவர்களின் கருத்தை மறுத்து, கடவுள் உலகத்தை படைக்கவில்லை. உலகமும், பிரபஞ்சமும் …

Read More

சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

By admin
April 11, 2015
in :  அயோத்திதாசர், உரைகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், விமர்சனங்கள்
Comments Off on சாதி, தீண்டாமையின் மூல வரலாறு – part 1

இந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் …

Read More

இந்துத்துவப் பயங்கரவாதத்தின் புதிய வேட்பாளர்!

By admin
October 11, 2013
in :  Article, நிகழ்கால அரசியல்
2

– கௌதம சன்னா         இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம், கலவரத்திற்குப் பஞ்சமில்லாத மாநிலம். அங்குள்ள சாதி இந்துக்களின் கட்சிகளுக்கு அதுதான் அடிப்படை மூலதனம். குறிப்பாக, பாரதிய சனதா கட்சி அங்கு தனது பயங்கரவாத உயிரை ஒளித்து வைத்திருக்கிறது என்று இசுலாமியர்கள் நினைக்கும் அளவிற்கு அது சிறப்பு வாய்ந்த மாநிலமாகத் திகழ்கிறது. ரத்த ஆறாய் ஓடிய சரயு நதியின் ஓரத்தில் அமைந்துள்ள பாபர் மசூதி விவகாரம் மட்டுமல்ல, இசுலாமியர்கள் வசிக்கும் பகுதிகளும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளும் எங்கெல்லாம் …

Read More

வரலாற்றின் வாய்ப்பு

By admin
August 17, 2013
in :  Activities, Article, Politics, VCK, நிகழ்கால அரசியல்
Comments Off on வரலாற்றின் வாய்ப்பு

    – கௌதம சன்னா              1995 வாக்கில் எனக்கிருந்த இடதுசாரி மற்றும் அம்பேத்கரியத் தாக்கத்தினால் மெட்ராஸ் சேரிப் பகுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதிலும், தலித் சமூக-அரசியல் வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் அலைந்துக் கொண்டிருந்த நேரத்தில் அங்கொன்றொம் இங்கொன்றுமாக தலித் பேந்தர் என்ற வேகமிகு அமைப்பு இயங்கி வருவதைப் பற்றி பேசப்படுவதைக் கேட்பதுண்டு, போகப்போக 1996ஆம் ஆண்டுகளின் தொடக்கதில் அது கொஞ்சம் அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருந்தது.

Read More

Reading The Other Side – In The New Perspective

By admin
May 18, 2013
in :  Interview, Politics, VCK, அயோத்திதாசர், அரசியல் பொருளாதார ஆய்வுகள், சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
5

An Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the Viduthalai Chiruthaikal Katchi (VCK), by Prof.Dr. Hugo Gorringe  – University of Edinburgh, United Kingdom, Hugo.Gorringe@ed.ac.uk ————————————————————- Published by ASIANIST, Edinburg, Uinted Kingdom ————————————————————- The compromised and ‘failing’ position of the Bahujan Samaj Party (BSP) and Republican Party of India, led one eminent commentator to urge Dalit activists and scholars to “look south because Tamil …

Read More

இடதுசாரிகளுக்கு மீண்டும் எழும் பழைய மோகம்

By admin
May 11, 2013
in :  Article, Politics, சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல், படைப்புகள், விமர்சனங்கள்
1

– கௌதம சன்னா எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத ஒரு சமுகமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. இணையத்தில் அதன் தாக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் கருத்தியல்களுக்கு எதிராகவும் பல நேரங்களில் வெளிப்படையாகவும், முற்போக்கு வேடம் அணிந்தவர்கள் நாசூக்காவும் தமது கருத்துக்களைப் பதிப்பிக்கின்றனர். இதுதான் இந்தக் கட்டுரையினை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது புரிதலை உருவாக்குவதற்கு பதில் பகையினை உருவாக்கிவிடுகின்றனது. எப்படியிருந்தாலும் பேசப்பட …

Read More

குச்சிக் கொளுத்தி வைத்தியர் டாக்டர்.ஈடிபஸ் என்றான கதை,

By admin
April 26, 2013
in :  சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
2

கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். இந்த         தலைப்பை மட்டிப் பயல்களெல்லாம் புரிந்துக்கொள்ள முடியாது என்பதால்  விளக்கமாகத்தானே பார்க்க முடியும். கிரேக்கத் துன்பியல் நாடகத்தில் மிக முக்கியமான கதை ஈடிபஸ் ரெக்ஸ் என்ற நாடகம், அந்த நாடகம் பின்வருமாரு விரிகிறது. தீப்ஸ் என்ற நாட்டிற்கு லயஸ் என்பவன் அரசனாக இருந்தான். அவனுக்கு ஜொகாஸ்ட்டா என்பவள் மனைவியாக, அரசியாக இருந்தாள். இவளது வயிற்றில் தனது கணவன் மூலம் ஒரு குழந்தை உண்டானது. அந்த குழந்தை எப்படி இருக்கும் என்று கோவிலில் உள்ள ஆரக்கிள் …

Read More

சேலம் வாழப்பாடியில் தலித்துகள் மீது தாக்குதல்

By admin
January 18, 2013
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நிகழ்கால அரசியல்
Comments Off on சேலம் வாழப்பாடியில் தலித்துகள் மீது தாக்குதல்

 சமரசம் கோரும் பாமக படைவீரர்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி நகரம் என்றமில்லாத அளவில் பதட்டத்தில் இன்று இருக்கிறது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொண்டக் கதையாக பாட்டாளிச் சொந்தங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 16.01.2013 அன்று இரவு சினிமா பார்க்க எல்லோரும் போயிருக்கிறார்கள். அதில் வன்னியர் தலித் என்ற பேதம் இல்லை. ஆனால் படம் பார்த்துவிட்டு வந்த சில தலித்துகளுக்கும் வன்னியர்களும் அற்ப காரணங்களுக்காக வாய்த்தகறாறு வந்திருக்கிறது. அது கைகலப்பாக மாறி வன்னியர்கள் தலித்துகளை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தலித்துகள் சிலபேரே இருந்ததால் அவர்களால் எதிர்த்துத் தாக்க …

Read More

துப்பு கெட்ட சாதிக்கு துப்பாக்கி இல்லை..

By admin
January 17, 2013
in :  Article, சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், நம்மைச் சுற்றி
Comments Off on துப்பு கெட்ட சாதிக்கு துப்பாக்கி இல்லை..

கோவையில் கடந்த 16.01.2013 அன்று இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 4000 பேர்கள் கலந்துக் கொண்டனர். ஆனால் கேலிக்கூத்தாக வெறும் 40பேர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Read More

கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு.

By admin
January 16, 2013
in :  சமூக அரசியல் நிகழ்வுகள், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு.

தொடரும் குச்சி கொளுத்திகளின் கைவரிகை குச்சிக்கொளுத்தி வைத்தியரும் அவரது அடியாட்களும் தருமபுரியில் காட்டிய கொள்ளை, தீவைப்பு ருசியை விடாத வன்னியர்கள் கடலூரில் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். பொதுச் சமூகத்தின் முன் தாம் ஒரு மோசமான குற்றவாளிகளாக தோற்றம் அளிக்கிறோமே என்று அப்பாவி வன்னியர்களும் கவலைபட்டுக் கொண்டிருக்கும் அவலத்தைப் போக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக வெட்கங்கெட்டுப்போய் சத்திரியர்களின் வீரம் என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

Read More

பிழைத்தவன் பிழைப்பு…

By admin
January 16, 2013
in :  கவிதைகள்
Comments Off on பிழைத்தவன் பிழைப்பு…

பிறப்பது ஒரு வேலையா இறப்பது ஒரு வேலையா வாழ்வதுதான் ஒரு வேலையா வேலையாய் மாறின பிறகு வேலை மட்டும்தானே வாழ்வு!

Read More

வெண்மணி – வீரவணக்கம்

By admin
December 25, 2012
in :  VCK, கவிதைகள்
1

சீறியக் கள்ளத் துவக்குகளின் குண்டுகள் துரத்திவந்த சாதிவெறிக் குண்டர்கள் வேடிக்கைப் பார்த்த கையாலாகா காவலர்கள்.. அரைபடி நெல்லை கூலியாய் கேட்டதற்கு மரணத்தை அளந்து த்தர அடியாள் பட்டாளத்தை ஏவியக் குருரம்.. வர்க்கமும் சாதியும் இணைந்துக் தாக்கிய வன்மம். ஆயுதம் அற்ற கைகளை போருக்கு அனுப்பிய வீரம் எல்லாம் சேர்ந்தன கீழ்வெண்மணிச் சேரியில்.. ரோமக் கொடியோர் பூட்டியத் தளையை சுமந்து தவித்த யூதக் குலத்தினை மீட்க உதித்த மைந்தன் பிறந்த நாளில் மீட்க வகையற்ற வேதனைகள் சூழ மீறும் தீ நாவுகள் பற்ற வெந்து மடிந்தனர் …

Read More

காந்தளவாடி பிரியா படுகொலை..

By admin
November 29, 2012
in :  Article, Politics, சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on காந்தளவாடி பிரியா படுகொலை..

 பாமக வன்னியரின் மற்றொரு வெறியாட்டம். கடலூர் மாவட்டத்தில் உள்ள கேஎம்சி கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பயின்று வந்தவர் காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா, இவரது தந்தை ஏழுமலை தனது மகளை காந்தளவாடியிலிருந்து பேருந்தில் அனுப்பி படிக்க வைக்க முடியாதக் காரணத்தினால் பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் கிராமத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்

Read More

சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.

By admin
November 29, 2012
in :  Events, Politics, Speech, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on சொந்தச் சாதிச் சகோதரனைக் கொன்ற கொலைகார வன்னியர்கள்.

நண்பர்கள் நாகராஜ் அவர்களின் படுகொலை குறித்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர், அதற்கு தேதிவாரியான விவரங்களை இங்கே தருகிறேன்.. கேள்விகளை மனசாட்சியுள்ள வன்னியத் தோழர்களுக்கும் முன்வைக்கிறேன். – இளவரசன் – பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு, விசய் கலை அறிவியல் கல்லூரி. – வித்யா – பி எஸ் ஸி, நர்சிங், இரண்டாமாண்டு, ஓம் சக்தி நர்சிங் கல்லூரி,

Read More

நாகராசன் படுகொலையில் தொடங்கி படுபாதகத்தில் முடிந்த சாதிவெறி..

By admin
November 29, 2012
in :  Politics, VCK, இயக்கங்கள், கட்சிகள், சமூக அரசியல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல், தலித் அரசியல், நம்மைச் சுற்றி, நிகழ்கால அரசியல்
Comments Off on நாகராசன் படுகொலையில் தொடங்கி படுபாதகத்தில் முடிந்த சாதிவெறி..

– டாக்டர் ராமதாசால் ஆசிர்வதிக்கப்பட்டு, காடு வெட்டி குருவால் வழிகாட்டப்பட்டு, பாமகவின் முன்னணி மாவட்ட நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு, முன்னாள் தீவிர மா.லெ வன்னியத் தோழர்களால் கூர் தீட்டப்பட்டு, சாதி வெறி ஊட்டப்பட்ட வன்னிய ஆண்கள், பெண்கள் ,இளைஞர்கள், சிறுவர்களால் நடத்தப்பட்ட தமிழக வரலாற்றின் மிகக் குருரமானத் தாக்குதல் நாகராசன்

Read More
12Page 1 of 2

Stay Connected

  • 0Fans
  • 0Followers
  • 2Members
1 / 6
2 /6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

Books

புத்தகங்கள்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

மலேசியப் பயணத்தில்.. தமிழ் பௌத்தம் – கருத்துரையின் மீது காட்டப்பட்ட கோபமும் காட்டமும்.

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

Load more

பௌத்தம்

திருவள்ளுவர் வாழ்விட வரலாறும் திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயிலின் பெளத்த தொடர்பும்

திருவள்ளுவர் யார்? Who is Thiruvalluvar?

கொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்

Follow us

© Copyright 2016, All Rights Reserved. Powered by Sanna Online | Designed by Sridhar Kannan